போராடுகின்றவர்களைச் சிறுமைப்படுத்தாதீர்கள்
அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி
2008, சூலை 19 அன்று, தமிழக மீனவர்களைச் சுட்டுத்தள்ளும் சிங்கள இராணுவத்தைக் கண்டித்து, சென்னையில், மாண்புமிகு தமிழக அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தலைமையில் பட்டினி அறப்போராட்டம் நடைபெற்றது. அப்போது லண்டன் பிபிசி வானொலி, அமைச்சரிடம் பேட்டி கண்டது.
மீனவர்களைச் சுட்டவர்கள் புலிகளாகவும் இருக்கலாம் அல்லவா என்று அவர்கள் கேட்க, இந்தக் கரையில் உள்ள தமிழர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் அந்தக் கரையில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படவில்லை என்று கூறினார். அப்படியானால் விடுதலைப்புலிகளை நீங்கள் மறைமுகமாக ஆதரிக்கின்றீர்களா என்று அவர்கள் திருப்பிக் கேட்க, நாங்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் நாட்டின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு நாம் உதவ முடியாவிட்டாலும், சிறுமைப்படுத்த வேண்டியதில்லை என்று தெளிவாகப் பதிலுரைத்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|