தீக்குளித்த முத்துக்குமாரின் நெஞ்சுருக்கும் நெருப்புத் துணுக்கு
சாதிப்பன
என்
கண்ணைத் தோண்டி,
அமிலம் ஊற்றி,
காலை வெட்டி,
கையை உடைத்து,
குடலைக் கிழித்து,
சதையை அறுத்து,
என்னைக்
கொன்றவிட்டதாக
எகத்தாளம் செய்யும்
என் எதிரணியில் உள்ள நண்பனே, நீ
அறிவாயா ?
போராளியின் வாழ்வைவிட
மரணம்
அதிகமாகவே சாதிக்கும் !
( நன்றி : கவிதாசரண் )
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|