வீரவணக்கம்
15-12-08 அன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைமை அலுவலகத்தில் தீரன் அப்துல் ரவூப்பின் 12ஆவது வீரவணக்க நினைவு நிகழ்ச்சி வடக்கு மண்டலச் செயலாளர் அன்புத்தென்னரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் சுடர் ஏற்றி, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார். 1995ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளத் தமிழகம் வந்த, சிங்கள விளையாட்டு வீரர்களை எதிர்த்து, ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிங்களவர்கள் தமிழகம் வரக்கூடாது என்று கூறித் தன் தேக்குமரத் தேகத்திற்கு, தீ வைத்துக் கொண்டு உயிர் நீத்த அந்த மாவீரன் நினைவைப் போற்றி சுபவீ பேசினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அ.பத்மநாபன், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த பேராசிரியர் குணசிங்கம் அவர்களும் மற்றும் நமது இயக்கத்தின் முன்னோடித் தோழர்கள் வீரவளவன், மு.மாறன், இரத்தின.செந்தில், க.மயில்வாகணன் மற்றும் இயக்கத் தோழர்கள் பலர் பங்கு பெற்றார்கள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|