அஞ்சுவதில்லை
காங்கிரசாரின் நெருக்கடி காரணமாகக் கோவை மத்திய சிறையில் அடைபட்டிருக்கும் கொளத்தூர் மணி, பெ.மணியரசன், சீமான் ஆகியோரை உடனே விடுதலை செய்யுமாறும், சீமானின் காரை எரித்த வன்முறையாளர்களை உடனே கைது செய்யுமாறும் தமிழக அரசை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது. ஈழத்தமிழர்களை ஆதரித்துப் பேசினால் அவர்களின் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போம் என்பது போன்ற மிரட்டலே சீமானின் கார் எரிப்பு. இது போன்ற இழிவான மிரட்டல்களுக்குத் தமிழின உணர்வாளர்கள் ஒரு நாளும் அஞ்சிப் பின்வாங்க மாட்டார்கள் என்பதைக் காரை எரித்த கயவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|