வீரத்தமிழ் விதை - முத்துகுமார்
நீ வீரத்தமிழ் விதை
எங்களுக்காக
நாங்கள் செய்யாததை
நீ செய்து...
செய் அல்லது செத்துமடி...
என்பதை
செவிப்பறையில் அறைந்து...
சொல்லியிருக்கிறாய்
உறவைக் காப்பாற்ற
உன்னால் முடியுமென
உயிரைச் சுருக்கி
உலகிற்கு உணர்த்தியிருக்கிறாய்...!
அகதியெனும்
அடை மொழியோடு
அலையும் எங்களால்
அழுவதைத் தவிர
வேறென்ன முடியும் - உனக்காக
நாளை
நாங்கள் சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் போது - அதில்
நீ...
விட்டுச் சென்ற
மூச்சுக் காற்றும் கலந்திருக்கும்
அப்போதும்
உனை நினைத்து
எம் கண்கள்
கலங்கியிருக்கும்...!
- ஈழத்து நண்பர்கள்,
காவாங்கரை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|