ஈழக் கடிதம்
குறிஞ்சி பிரபா
கண்மூடி உறங்குகையில்
கண்ணிவெடிச் சத்தம்
சத்தத்தில் மரத்துப்போகும்
பிள்ளை தரும் முத்தம்
எங்கள் தெருவில் இருப்பதால்
கரம் உடைந்து நிற்கிறார்
கடவுள் கூட!
எங்கள் குழந்தைகளின்
விரல்பிடித்து நடந்ததைவிட
விழி துடைத்து நடந்த
நாட்களே அதிகம்!
நீங்கள் தமிழனென்று சொல்லித்
தலைநிமிர்ந்து நிற்பீர்கள்
நாங்கள் தமிழனென்று சொன்னால்
தலை உதிர்ந்து கிடப்போம்
பாரதி சொன்னது போல்
பாலங்கூட வேண்டாம்
வந்து நின்றால்
தருவீர்களா
ஒருகை சோறும்
உறங்க ஓர் இடமும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|