Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thakkai
Thakkai
ஆகஸ்ட் 2008
சீன ஜென் கவிதைகள்
(கி.பி. 1127 - கி.பி. 1279)
தமிழில் சி. மணி

Painting இலக்கு அடைந்தாயிற்றா,
சிரித்துக்கொள், நன்றாக - மழித்த
நிலையில் இன்னும்

அத்தனை அழகு, நீ
பயனற்ற அந்தப்
புருவங்கள்.

- போதி - கிஷூ

****

இந்தச் சரீரம் மாசுபடுத்தாது
அந்த மலர் சொரியும் மலைச்சாரலை
தோண்டாதே அங்கே குழி;

சமாதிச் சுடருக்கு என்ன
வேண்டிக் கிடக்கிறது?
அடுக்கிய கட்டைகள்,

போதும்.

மரணம் - செய்கியோகூ - செய்கியோ

****

மனிமில்லை புத்தா இல்லை
இருத்தலில்லை சிதறிக்
கிடப்பவை சூன்யத்தின் எலும்புகள்
இந்தப் பொன் சிங்கம்
ஏன் தேடிப் பிடிக்க வேண்டும்
அந்த நரிக்

குகையை?

- போதி - டீகன்

****

வரும்போது போகும்போது விட்டுச்
செல்வதில்லை காட்டு நீர்ப்பறவை

ஒரு சுவடு;
தேவையும் இல்லை. அதற்கு

ஒரு வழிகாட்டி

- டோஜன், 1200 - 53

****

எழுபத்தி இரண்டு ஆண்டுகள் அடக்கி
வைத்திருந்தேன் இந்த எருதை நன்றாக.

இன்று
மீண்டும் ‘ப்ளம்’ மரம் பூத்திருக்க
பனிப்பொழிவில் அலையவிட்டேன்.

அதை.
- ரோகுயோ 1384 - 1455


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.