Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Thakkai
Thakkai
ஆகஸ்ட் 2008
அநாமதேயம்
பாக்கியம் சங்கர்

Orphan இன்று பூராவும்
சந்தோஷங் கொண்டிருக்க
ஏதாகிலும் செய்தாக வேண்டும்
தயிர்சாதம் பிசைந்து
ரோகிகளுக்கு ஊட்டிவிடுதல்
முடிந்தமட்டில் ரோகிகளில்
ஒருத்தரையாவது குளிப்பாட்டி
வெளுத்த உடைகளை உடுத்தி
அழகு பார்த்தல் என
ஏதாகிலும் செய்தாக வேண்டும்

முட்டக் குடித்துவிட்டு மலையுச்சியிலிருந்து
குதித்துவிட்டால் மிகவும் நல்லது
நாமங்கெட்டு அலைதல்
பெரும் சுகமென பாபுவிடம்
ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்
பதியனிட்ட மிளகுச் செடிகளை
உன் வீட்டில் நட்டு வைத்துவிடலாம்
இனி அடையாளங்கள் தேவையில்லை
சுற்றியாகிவிட்டது
கடலென கரைந்து
கரை ஒதுங்கும் பட்சத்தில்
யாரும் என்னைக்
கண்டுகொள்ளாமல் இருந்தால்
அது போதும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.