புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீடு இடிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை, சிங்கள இராணுவத்தினர் இடித்துச் சாய்த்தனர்.
பிரபாகரன் வீடு : விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பூர்விக வீடு, யாழ்ப்பாணம் அருகே உள்ள வடமராட்சி வல்வெட்டித் துறையில் இருக்கிறது. இந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை. அந்த வீட்டை அப்பகுதி மக்கள் பராமரித்து வந்தனர். 11.9.2008 அன்று இலங்கை இராணுவத்தினர் அணி வகுத்துச் சென்றனர். அப்போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இடிக்கப்பட்டது : சிங்கள இராணுவத்தினர், பிரபாகரனின் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் கதவு, சன்னல், மற்றும் சுவர்களை இடித்துத் தள்ளினர். வீட்டின் நிலை மற்றும் கதவுகளை எடுத்துச் சென்று விட்டனர். இராணுவத்தினர் சென்றபின், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்து மனம் நொந்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் தெரிவித்தனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|