டீ குடிங்க...
கவி.இலமு, திண்டுக்கல்
சம்பளம் பெற
இன்னும் மூன்று நாளிருக்கு...
கண்ணாடியைப்
பார்த்த போது தாடியையும்
எனது தலைமுடியையும் வெட்ட
நேரம் வந்துவிட்டது என
தெரிந்தது.
பத்து நாட்களுக்குள்
இவ்வளவு வேகமாக
வளர்கிறது எனது முடி...
யோசனையில் ஆழ்ந்த போது
பால்காரனின் மணிச் சத்தம்
பால்காரனின்
புன்னகை எதையோ
சொல்ல வந்தது
எனக்குப் புரியவில்லை.
மளிகைக் கடைக்குச்
சென்றேன்.
மளிகைக் கடைக்காரரின்
அன்பான உபசரிப்பு.
அலுவலகத்திற்குச்
சென்று கொண்டிருந்த போது
எதிரில் புன்னகையுடன் வந்த
சலூன் கடைக்காரன்
‘வாங்கண்ணே
டீ சாப்பிடலாம்’ என்றான்.
சட்டெனப் பொறி தட்டியது
சம்பளம் வாங்க
இன்னும் மூன்று நாளிருக்கிறது. செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|