2008ஆம் ஆண்டு இலக்கியப் பரிசுகள்
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்புகளுக்கான கீழ்க்கண்டபரிசுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் வழங்கி வருகிறது. 2008ஆம் ஆண்டுக்கான பரிசுகளுக்கான பரிசீலனைக்கு நூல்கள்/குறுந்தகடுகளை வரவேற்கிறோம். ஒவ்வொரு புத்தகமும் நான்கு பிரதிகள் அனுப்ப வேண்டுகிறோம். பரிசு பெறாத நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது .குறுந்தகடுகள் சிடி அல்லது டிவிடி வடிவில் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒருவரே எத்தனை நூல்கள்/தகடுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். நடுவர் குழுக்களின் முடிவே இறுதியானது. முடிவுகள் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30.4.09.
அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், ஊ/டி பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை சிக்னல் அருகில், இரண்டாவது மாடி, சென்னை -600018.
1. நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு- சிறந்த நாவலுக்காக ரூ.5000/-
2. புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு- சிறந்த சிறுகதை நூலுக்கு ரூ.4000/-
3. குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல் - ரூ.4000/-
4. அமரர் சேதுராமன் - அகிலா நினைவுப்பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ.2500/-
5. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப்பரிசு - சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ரூ.2000/-
6.அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு - சிறந்த கவிதை நூலுக்கு ரூ.2000/-
7. ஈரோடு அமரர் ரத்தினம் கண்ணுசாமி நினைவு அறக்கட்டளை விருது - சிறந்த இரு குறும்படங்கள் மற்றும் சிறந்த இரு ஆவணப்படங்களுக்கு தலா ரூ.2500/-
8. அமரர் சு.சமுத்திரம் நினைவுப்பரிசு - ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு (கதை, கவிதை, நாவல், ஆய்வு, கட்டுரை எதுவாகவும் இருக்கலாம்) - ரூ.10000/-
அன்புடன்
ச.தமிழ்ச்செல்வன்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு
57/11, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை-625 001.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|