எம்.சுந்தரவள்ளி கவிதைகள்
அரிதாரம்
குழந்தையின் முன்னால் கோமாளியாய்
கணவரின் முன்னால் காதலியாய்
தந்தையின் முன்னால் மகளாய்
தாயின் முன்னால் சேயாய்
ஆசானின் முன்னால் மாணவியாய்
அதிகாரியின் முன்னால் பணியாளாய்
கண்ணாடி காட்டிய
என் முகத்தில்
எனக்கே தெரியாமல்
எத்தனை அரிதாரங்கள்...?
காலை வேளை
கடிகாரம் பார்க்காமல் எழுந்து
கணவர் கொடுத்த காபியை
கண்விழிக்காமல் குடித்து
நிதானமாய் எழுந்து-குளித்து
நினைத்த உடை உடுத்தினேன்
டிவியை ரசித்தபடி
டிபன் புசித்தேன்
அக்கா... அக்கா...
பால்க்காரப்பெண் கதவைத் தட்டினாள்..
கண்விழித்துப் பார்த்தேன்
காலை மணி 7
ஐயோ!
ஆபீசுக்கு நேரமாச்சு...!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|