கன்னட மொழிக்கவிதைகள்
மூலம் : ரேணுகாகோட குண்டீ
தமிழில் : கு.பத்மநாபன்
நம்பிக்கை
ஏமாற்றம்
கொள்ளாதிரு தோழி!
உன்
கண்களின் கனவுகள்
கண்ணீர் நதியில்
கலந்து போயின என்று
நிராசைப் படாதிரு.
சுடு வெய்யிலில்
வெடிப்புற்று
இன்றோ நாளையோ
கண்மூடுவேன் என
வாய்விட்டுப்
புலம்பிக் கொண்டிருந்த
பூமி
இன்று
மழைத்துளியில் மின்னி
உடம்பெல்லாம்
பசுமைப் போர்த்தி
'கலகல' என்று
நகைக்கிறது.
நீயும் கூட
காத்திருத்தல் ஆகாதோ
மழையின்
துளி ஒன்று
விழுந்திடும் வரையில்.
அம்மா
அம்மாவின்
பழைய சேலை
என் ஜீவன்
அவளின்
கிழிந்த சேலை
எனக்கு வாழ்க்கை.
அவள்
சேலைத் தலைப்பால்
துடைத்த கண்ணீர்த் துளிகள்
அதனுள் இருக்கின்றன.
அதில் உள்ள
முத்து இரத்தினங்களை
நான்
ஆராய்ந்து வருகிறேன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|