|
வண்ணக் கலவை
நடராஜன் காளிதாசன்
துப்பாக்கி
பீரங்கி
ஏவுகணை
ஏனையவும்
ஏழுவர்ணம்
பிரித்திடுமோ?
வண்ணவில்லை
முறித்திடுமோ?
பாரதமும்
வானவில்தான்
பயங்கரவாதி
பண்டமாகி
பணயமாகி
படிந்துவிட்டாய்
பணம் வேண்டுவோர்க்கு
பணம்
மதம் பிடித்தோர்க்கு
மதம்
எதிரிகள்
யாரென்பதை
அறியாத நீ
உன்
எஜமானத்தின்
முகமும்
அறிந்திருக்க மாட்டாய்
விசுவாசத்தின்
வெறியை மட்டும்
கண்ணிரண்டில்
தேக்கி நின்றாய்
உன் தோட்டாக்கள்
துளைத்து வடித்த
உதிரம்
சிதைத்துச் சிதறிய
உடல்கள்
ருசித்துப் பறித்த
உயிர்கள்.
இவையாவும்
உன்னோடானதும்
உன் கூட்டாளிகளோடானதுமான
உடற்கூறுகளிலிருந்து
மாறுபட்டிருப்பதாக
இன்றுவரை செய்திகளேதுமில்லை.
சுனாமிகள்
பூகம்பங்களுடன்
உன்னையும் தாங்கி
தன் போக்கில்
சுழன்று கொண்டு
பூமி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|