ரம்யாவின் கனவு!
நா.லீலாவதி
(ஆறாம் வகுப்பு - ஆ பிரிவு, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடல்நகர் - மதுரை.)
ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு குடும்பம் இருந்தது. அதில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை இருந்தனர். அண்ணனின் பெயர் ஆனந்த், தங்கையின் பெயர் ரம்யா. இருவரும் பள்ளியில் படித்து வந்தனர்.
அப்பா விவசாயம் செய்து வந்தார். அம்மாவும் சும்மா இல்லை, அவள் வீட்டு வேலைகள் செய்து வந்தாள். அன்று காலையில் வழக்கம் போல அண்ணனும், தங்கையும் பள்ளிக்கூடம் கிளம்பினர். ரம்யாவுக்கு கிளி வளர்க்க வேண்டும் என்று கொள்ளை ஆசை. அவள் மனசெல்லாம் கிளிகள் நிறைந்திருந்தன. அந்தக் கிளிகள் அவளது சிந்தனை வானில் சிறகடித்துப் பறந்து திரிந்தன. பச்சைப்பசேல் என்று அவளின் அப்பாவின் வயல்வெளி போல அவள் மனசெல்லாம் பச்சை வண்ணத்தில் கிளிகள். இருவரும் அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடம் கிளம்பிப் போனார்கள். அப்பா வயலுக்குக் கிளம்பினார்.
அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, வீட்டுவேலைக்குக் கிளம்பிய அம்மா கதவைப்பூட்டி, சாவியைக் கொண்டு போய் வயல் காட்டில் வேலை செய்து கொண்டிருந்த தனது கணவரிடம் கொடுத்து விட்டு ஓடினாள்.
தங்களின் இரு பிள்ளைகளின் படிப்புக்காக குருவிபோல் அவர்கள் காசை சேர்த்து வைக்கின்றனர். அவர்களின் மகள் ரம்யா ஒரு கிளிக் கூண்டில் இரண்டு கிளிகள் வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
இரவு வந்தது.
எங்கும் ஒரே அமைதி. அமாவாசை. இருட்டில் வானமே கருத்து இருந்தது. ரம்யாவின் மனசில் மட்டும் பச்சைக்கிளிகள். எல்லாரும் உறங்கிவிட்டனர். அவள் மட்டும் விழித்திருந்தாள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|