கடவுள் பெயரால்....
ஆறு. கணேசன்
எந்த யுகத்திலேனும்
ஆபிரகாமும்
அரங்கநாதப் பெருமானும்
வாளெடுத்துச்
சுழற்றியதுண்டா....
எந்த நூற்றாண்டிலும்
பாத்திமா நாச்சியாரும்
பார்வதி தேவியும்
நேருக்கு நேர்
மோதியதுண்டா....
அன்பைப் பரப்பும்
ஆண்டவர்களின் பெயரில்
மதமுக மூடிகள்
விஷத்தை விதைக்கின்றன.
மழையைப் பிரசவிக்கும்
மேகங்களின் நடுவில்
எந்த இறைவனின் ஆட்சி!
சூரியக் கதிர்களின்
சுடரொளி
எந்தக் கடவுளின்
பெயரால்?
பூமிப் பந்தின்
சுழல் பரப்பில்
எந்த இறைவன்
முகம் பார்க்கிறான்?
கடவுள்களின் கூட்டணி
கைகோர்த்து வருகையில்
மனிதமுகங்கள் மட்டும்
மறைவாய் ஒரு போருக்கு
ஒத்திகையாய்....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|