பள்ளிக்கூடம்
பொ.சித்ராதேவி
சிலேட்டுக்குச்சிக்காக
பாம்புவரும்
பல்லிவரும்
சொன்ன பொய்களும்
வாய்ப்பாடுகளை
ஆடி ஆடி
மனனம் செய்ததும்
மக்காச்சோளக்கட்டை
எறிந்து விளையாடியதும்
கையெழுத்திற்காக
கைமொட்டில்
ஆசிரியர்
அடித்த அடிகளும்
திரும்பப் பெறமுடியுமா
வாழ்க்கையில்
டோராவின்
பயணங்களையும்
ஹீமேனின்
சாகசங்களையும்
பண்டர்லேரோவின்
வீரங்களையும்
என்றும் ரசிப்பேன்
என் தம்பிக்காக!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|