வரம்
ஆதிசேஷன்
நேற்றைய இரவின்
உறக்கத்தினூடே
காளியாத்தாள் வந்தாள்
திரிசடை பறந்தாட
கனல் தோற்கும் கண்களில்
அசுரவெறி
பக்தரைக் காப்பாற்றும்
பன்னிரு கைகளில் ஆயுதங்கள்
முந்திய நாள்
மூன்றாந் திருவிழாவில்
கண்ட அதே உருவம்
"அஞ்சாந் திருவிழாவுல
ஆடு வெட்டி ஆக்கிவை
எல்லா சவுரியமும் தர்றேன்"
வேண்டுகோளாய்
நான் கேட்காமலேயே வரம்
பந்தி போட ஆசைதான்
காளீ....
ஆடுவெட்டி ஆக்கி வைக்க
அஞ்சு வட்டிக்கு
ஆள் சொல்லு தாயீ...!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|