நூல் மதிப்புரை
புதிய பரிதி எழுதிய தமிழ் என் காதலி (கவிதைத் தொகுப்பு)
அழகியல் சுரக்கும் கவிமனசு எதையும் வித்தியாசமாகவும், ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிட்டும், முரண்படுத்தியும் பார்க்கும்; மனிதர்க்கு இயல்பாய்த் தெரிவதைக் கூட வியந்து நோக்கும்; எதையும் கேள்விக்கு உள்ளாக்கும்; உணர்ச்சி அலை புரளச் செய்யும். கவி மனசுக்கு வயது வித்தியாசமில்லை. பிஞ்சு நெஞ்சங்களில் கூட கவிமனசு பூத்துவிடும்!
தேனியைச் சேர்ந்த 15வயது பள்ளி மாணவன் புதிய பரிதி - இந்தப் பிஞ்சு வயது மாணவனின் கவிதைத் தொகுப்பாக 'கவிதை என் காதலி' வெளிவந்துள்ளது.
'கவிதை எனது கூர்வாள்
கற்பனை எனது கவசம்
தீமைகளே எனது எதிரி
இவ்வுலகில் நான் ஒரு போர் வீரன்!
நேர்மையே எனது படைகள்
நாட்டுப்பற்றே எனது உயிர்
இவ்வுலகில் நான் ஒரு போர்வீரன்!"
தீமைகளே இல்லா ஒரு தேசத்தைப்பெற கவிதை வாளேந்தி களம் இறங்கும் இந்த இளங்கவி பாராட்டுக்குரியவர். இன்று ஒரு கவிஞனுக்கு வேண்டியது தேசப்பற்று. அதை இந்தப் பிச்சுக் கவி பிரகடனம் செய்திருக்கிறார்.
"நேரத்தைத் தொலைப்பதனால்தான்
அதற்குப் பெயர்
'தொலை'க் காட்சி"
"எல்லோரையும் உட்கார வைத்துவிட்டு
நின்று கொண்டே இருக்கிறது
மரியாதையான நாற்காலி...."
- தன் தண்ணில்படுவதை இப்படியெல்லாம் கவிஞனுக்குரிய பார்வையோடு வித்தியாசமாகப் பார்க்கத் தெரிகிறது புதிய பரிதிக்கு. நல்ல சமூக நோக்குள்ள கவிதைகளும் இவர் படைத்துள்ளார். ஒரு முற்போக்குக் கவிஞனாக வளர்வதற்கான முன்னடையாளம் இவரது பல கவிதைகளிலே தெரிகிறது. கவிதைப் படைப்பில் தொடர் பயிற்சி தேவை என்பதும் தெரிகிறது.
இவர் -இந்தப் பள்ளி மாணவர் ஒரு வளரும் கவிஞர். வாழ்த்துவோம்!
வெளியீடு : 'செவீ' பதிப்பகம்
38, பிசுமி நகர்
குன்னூர் (அஞ்சல்)
தேனி - 625 531,
விலை : ரூ.30/-
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|