சாத்தூர் அ.இலட்சுமி காந்தன் கவிதைகள்
ஆளுமை
மனம் தொடர்ந்து வரும் துரோகங்களுக்கும்
நிஜம் முகிழ்ந்து வரும் ப்ரியங்களுக்கும்
பலியாகிறேன்
சுடர் மறைந்த திரியென கருகவும்
உயிர் பூத்த செடியென துளிர்க்கவும்
விதிக்கப்படுகிறேன்
நிறம் தொலைத்த வண்ணமென
உரம் கொழித்த பூமியென
வளர்ந்தேகிறேன்
தன் நிழல்படர
பயந்தோடும் சிறு பறவையாய்
பிறர் நிழல் சுமந்து
வியந்தலையும் கருவியாய்
புதிராகிறேன்.
தயை
ஒவ்வொருவரிடமும்
அவர்தம் செயலிலும்
நான் விழைகிறேன்.
நிறுத்து தரும் பொருளின்
தராசில் கூடுதலான
சாய்ப்பை
விரும்பித் தரும் அன்பில்
பொங்கிப் பெருகும் பிரவாகத்தை
அன்னமிடும் பொழுதில்
மிகையான பணிவை
கூடி செய்யும் செயலில்
வேண்டுதலற்ற ஒத்துழைப்பை
எதிர்பார்ப்பின் நொடிகளில்
தவறவிட்ட வரிகளை
எப்படியேனும் கடந்துவிடும்
நம் வாழ்வை
செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|