குராயூர் எரியீட்டி கவிதைகள்
மணக்கும் வண்ணப்பூக்கள்
இயற்கை அழகு
சுவைக்கப் பழகு
எனவுரைக்கும் நூல்கள் - நாம்
என்றும் கற்க
இனிமை சேர்க்க
இயம்பும் சங்க நூல்கள்
பத்துப் பாட்டு
எட்டுத் தொகையைப்
படிக்க வேண்டும் நாளும் - நாம்
படிக்க படிக்க
நெஞ்சுக் குள்ளே
இன்பக் கதைகள் நீளும்.
தமிழர் வாழ்வைத்
தொகுத்துக் கூறும்
சங்கத் தமிழின் பாக்கள் - நாம்
தமிழர் என்று
நிமிர்ந்து நிற்க
மணக்கும் வண்ணப் பூக்கள்
இன்பம் - இன்பம்
எங்கள் அம்மா
எங்கள் அப்பா
இருவருக்கும் செல்லம் நான்
எங்க ளுக்குள்
வேற்று மைகள்
வந்த தில்லை இன்பம் தான்.
அந்தப் பிள்ளை
போல நீயும்
இல்லை யென்று சொல்லும்
அசிங்கம் இல்லை
எங்கள் வீட்டில்
அன்பு வந்தே துள்ளும்.
தம்பி தங்கை
யோடு நாங்கள்
குறள் படிப்போம் நாளும் -
சங்கத் தமிழ்ப்
பாமணக்கும்
நெஞ்சில் இன்பம் ஊறும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|