ஜனநேசன் கவிதைகள்
விசாரிப்பூ
விழுந்த வலியை விட
விசாரிப்பின் ரணம் அதிகம்
யோசித்துப் பார்க்கிறேன்.
ஒருவேளை யாரும் விசாரிக்காமல் இருந்திருப்பின்
தனிமையில் சிதைந்திருப்பேன்
கடித்த காட்சி
சேரிச் சிறுமிகள் இருவர்
ஒரு பருப்பு வடையை பிய்த்து
தின்னத் தின்ன
உதிரும் உணவுக் கழிவுகளை
களிப்போடுக் கவ்வி
விரையும் எறும்புகள்!
மிளகாய்க் கடித்த பாவனையில்
நீர் மொண்டு மொண்டு
வயிறு நிரப்பி
வடைக்காரியிடம் காசு கொடுத்து
குப்பைச் சாக்கை முதுகில் போட்டு நகர்கிறார்கள்
பெரிய வீட்டுக் கழிவுகளை பொறுக்க...!
சுருக்கென்று இதயத்தைக்
கடித்தது அறிவு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|