சினேகிதம்
வெ.அருண்பாரதி
இப்போதெல்லாம்
அலைபேசியின் குறுந்தகவல்களோடு
நின்று விடுகிறது
நம் சினேகிதம்
அதிலும்
தனிப்பட்ட விசாரிப்புகள்
ஏதுமிருப்பதில்லை
வாடகை வாக்கியங்களைத் தவிர
உன் தோள் பற்றி
முகம் பார்த்து
பகிர்தல் என்பது
வாய்ப்பதேயில்லை
நாம் பரிமாற இயலாத
இதய விசும்பல்கள்
புகலிடம் தேடுகின்றன.
தூர தொலைவிருக்கும்
நண்பனுக்கு
குறுந்தகவல் அனுப்புகையில்
எதிர் வந்த நண்பனை
மறந்து விடுகிறோம்
பல சமயங்களில்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|