Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruScienceEcology
சுற்றுச்சூழல்

பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
மு.குருமூர்த்தி

monkey காலநிலை மாற்றம் இன்று உலகளாவிய பிரச்சினை. மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் கூடத்தான். வனபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த அறிஞர்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தினால் 12 வகையான நோய்கள் மனிதர்களையும், வன உயிரினங்களையும் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். வெப்பநிலை மாற்றத்தினால் பரவக்கூடிய இந்த நோய்களையும் பட்டியலிட்டுள்ளனர்.

இந்த நோய்க்கிருமிகளின் தாக்குதலை சமாளிக்க வனவாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் என்றும் இந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் என்றவுடன், பனிக்கட்டியின் உருகுநிலை, உறைநிலை மாற்றங்களையும், கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி கடற்கரை நகரங்களை பாதிக்கின்றன என்பதை மட்டுமே நாம் பேசிவருகிறோம். இதே காரணத்தால் ஆபத்தான நோய்க் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன என்பதைப்பற்றி நாம் கவனத்தில் கொள்வதில்லை.

வனவிலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள், அவை வாழும் சுற்றுச்சூழலை சார்ந்தவை. சூழலில் ஏற்படும் சிறுமாற்றங்களினால் கூட வனவிலங்குகள் நோய்களுக்கு ஆளாவது மட்டுமல்லாமல் நோய்களையும் பரப்புகின்றன.

அண்மையில் வெளியான "Global Climate Change and Extreme Weather Events" என்கிற புத்தகத்தில் "Wildlife Health as an Indicator of Climate Change" என்கிற கட்டுரை வெளியாகி உள்ளது. வன உயிரினங்களை தாக்கி நோயை உண்டு பண்ணும் இந்த நோய்க்கிருமிகள் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. 1990 ல் மறைந்துபோன இன்புளூயென்சா போன்ற நோய்கள் மறுபடியும் பிறவியெடுத்து உலகப் பொருளாதாரத்தில் 100 பில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

வனபாதுகாப்பு சங்கத்தின் அறிக்கை அண்மையில் பார்சிலோனா நகரில் நடந்த உலக பாதுகாப்பு காங்கிரஸ் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், புவிவெப்பமாற்றம், உறைநிலை மாற்றம் இவற்றால் வன உயிரினங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில நோயகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இறுதியானது அல்ல எனவும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

ஏவியான் இன்ஃபுளூயன்சா,
ஃபேபிசியாசிஸ்
காலரா
இபோலா
குடல் ஒட்டுண்ணிகள்
லைம் நோய்
பிளேக்
சிகப்பு அலைகள்
ரிஃப்ட் வேலி சுரம்
உறக்கநோய்
காசநோய்
மஞ்சள் சுரம் ஆகியவை அந்த நோய்களின் பெயர்கள்.

நோய்க்காரணிகள் இடம்பெயருவதை கவனமாக கண்காணிப்பதன் மூலம் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையே இந்த நோய்கள் பரிமாறிக் கொள்வதை தடுக்கமுடியும்.

இன்னும் படிக்க:.http://www.sciencedaily.com/releases/2008/10/081007073928.htm

- மு.குருமூர்த்தி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com