Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruScienceEarth
புவி அறிவியல்

ஊர்வன
மு.குருமூர்த்தி

ஊர்வன என்பவை தரையோடு தரையாக ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஆகும்.

Snake ஊர்வனவற்றின் சிறப்புக் குணங்கள்:

1. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தல்
2. முதுகெலும்புள்ள பிராணிகள்
3. கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக்கொண்ட விரல்கள்.

பறவைகளும் கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக் கொண்டிருக்கின்றன. எனவே பறவை அல்லாத ஊர்ந்து செல்லும் உயிர்களை ஊர்வன என்று வகைப்படுத்தலாம். எறும்பு, தேள், பூரான், பூச்சிகள், சிலந்தி போன்றவற்றிற்கு முதுகெலும்பு இல்லை. எனவே ஊர்வன என்று இப்பிராணிகளைக் கூற இயலாது.

சிறுவர்கள் வேலிகள், புதர்கள் இவற்றில் காணப்படும் ஓணான்களை எந்தவித காரணமும் இன்றி அடித்துக் கொன்றுவிடுகின்றனர். ஓணான்கள் நமக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மாறாக நமக்கு அவை நன்மையே செய்கின்றன. பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அவை இரையாக உண்ணுகின்றன.

பாம்பைக் கண்டால் அடித்துக் கொல்லும் மானிடர்கள் உண்டு. பயந்து ஓடும் மானிடர்களும் உண்டு. பாம்புகள் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கிழைப்பதில்லை. பாம்பு கடித்து சிலர் இறந்திருக்கலாம். தனக்கு ஆபத்து என்று உணரும்போது மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. மனிதர்களைத் தேடிவந்து எந்த பாம்பும் கடிப்பதில்லை.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.