Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruScienceEarth
புவி அறிவியல்

கடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா?
மு.குருமூர்த்தி

beach நீரிலும் நிலத்திலும் வசிப்பதால் தவளைகளை இருவாழ்விகள் என்றழைக்கிறோம். தவளைகளின் வாழ்க்கை பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகிலேயே இருப்பது கவனிக்கத்தக்கது. நீரில் தோன்றிய தவளை நிலத்தில் வாழ்வதற்கு பரிணாம வளர்ச்சியில் பல மாற்றங்களைப்பெற வேண்டியிருந்தது. மீன்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் நுரையீரல்களால் சுவாசிக்கவேண்டியிருந்தது. மேலும் தவளைகளின் முட்டைகள் காற்றிலோ, வெய்யிலிலோ அதிக நேரம் இருந்தால் நீர்ச்சத்து ஆவியாகி முட்டையில் உள்ள கரு இறந்துவிடும். தவளையின் தோல் மெல்லியதாகவும், நீர் புகக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே தவளைகள் அதிக காற்று உள்ள இடங்களையும், வெய்யில்படும் இடங்களையும் தவிர்த்துவிடும். தவளைகள் கடல்நீரில் வாழ்வது இல்லை. கடல்நீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு தவளையின் உடலுக்குள் சென்றால் தவளை இறந்துவிடும். ஆனால் கடல் நடுவே இருக்கும் தீவுகளில் தவளைகள் காணப்படுவது எப்படி? இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் தாழ்வாக இருந்ததால் இரு சாத்தியமாகி இருக்கிறது.

தவளைகளுடன் ஒப்பிடும்போது பல்லிகள் சற்று முன்னேறிய இனம் என்பதை உணரலாம். காரணம் பல்லிகள் ஓடுடன் கூடிய முட்டைகளை இடுகின்றன. இதனால் நீர்நிலைகளின் அருகில்தான் முட்டையிடவேண்டும் என்கிற அவசியம் பல்லிகளுக்கு இல்லை. மேலும் பல்லிகள், ஓணான்கள் இவற்றின் உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளதால் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது. பல்லிகள் மற்றும் ஓணான்களின் கால்விரல்கள் மரக்கிளைகளைப் பற்றிக்கொள்ள முடியும். ஆனால் நீந்துவதற்கு ஏற்றவாறு கால்விரல்கள் இல்லை. ஆனால் தீவுகளில் பல்லிகளும், ஓணான்களும் காணப்படுவதற்குக் காரணம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல் மட்டம் தாழ்வாக இருந்ததுதான்.

மனிதர்கள் மூலமாக பல்லிகளும், ஓணான்களும், தவளைகளும் தீவுகளைச் சென்றடைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமில்லை. ஏனெனில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடக்கூடிய பல்லிகள் காணப்படுகின்றன.

எனவே, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக கடல்மட்டம் தாழ்வாக இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.

நன்றி: தினமணி/04/01/2009
தகவல்: மு.குருமூர்த்தி
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP