ஒரு தாதா கவிதை செய்வது எப்படி?
ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன். எம்
தேவைப்படும் பொருட்கள்:
ஒரு செய்தித்தாள், ஏதோவொரு கத்திரிக்கோல்.
நீங்கள் செய்ய நினைக்கும் கவிதையின் நீளம் கொண்ட ஒரு கட்டுரையை, செய்தியை செய்தித் தாளிலிருந்து வெட்டி எடுங்கள். வெட்டி எடுக்கப்பட்ட கட்டுரையின், செய்தியின் வார்த்தைகளை ஒவ்வொன்றாக, மிக கவனமாக வெட்டி எடுங்கள். வெட்டி எடுத்த வார்த்தைகள் அனைத்தையும் ஒரு பையில் இட்டு குலுக்குங்கள். குலுக்கிய பின் பையின் உள்ளிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக வெளியே எடுங்கள். அவற்றை மிகுந்த கவனத்துடன் பையிலிருந்து எடுத்த அதே வரிசையில் ஒரு தாளில் பிரதியெடுங்கள்.
இப்போது உங்கள் முன் உங்களைப்போலவே உங்கள் கவிதை.
அதன் முன் சுயம் ததும்பும்
படைப்பாளியாக நீங்கள்.
வக்கிரம் நிறைந்த மந்தைக்கு இதை
ரசிக்கத் தெரியாது.
- டிரிஸ்டன் ஸாரா
(Tristan Tzara) (1986 - 1963)
நான் திரும்பச் சொல்கிறேன்:
அனைத்தையும் விட்டு விடுங்கள்.
‘தாதா’ வை விட்டுவிடுங்கள்
மனைவியை விட்டு விடுங்கள்; காதலியையும் கூட,
உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் விட்டுவிடுங்கள்
உங்கள் குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு விடுங்கள்
உங்களுடைய நிழலிருந்து விடுபடுங்கள்
தேவைப்பட்டால், உங்களுடைய சுகமான
வாழ்க்கையையும் ஒளிமயமான வாழ்க்கையையும் விட்டுவிடுங்கள்
நெடுஞ்சாலையில் நில்லுங்கள்
- ஆந்த்ரே ப்ரத்தோன்
(Andre Breton) (1986-1966)
ஆங்கிலம் வழி தமிழில்: கண்ணன். எம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|