விழிப்பின் இரகசியம்
விழி.பா.இதயவேந்தன்
உறங்காமல் எப்போதும்
விழித்திருக்க நினைக்கிறேன் நான்.
நான் என்பது
பெயர் தாங்கியப் பலகை என்பதல்ல.
என் உயிர்கள் அடங்கிய
உடல், வீடு, உறவு...
என எல்லாம் தான்
என்னாலும்
என்னைச் சுற்றியும் வலைப்பின்னல்களாய்
வலம் வருகிறது பார்வையின் துகள்கள்.
விழிப்பின் இரகசியம்
அறிந்திருக்கவேண்டும் எவரும்
அறிஞர்கள், ஆன்மீகவாதிகளின்
விழிப்பு என்பது
அர்த்தங்கள் எல்லாம் வெவ்வேறானவை
கடும் சூழலில்
முட்டிமோதும் பிரச்சினைகளில்
இறுகிப்போய் கருகாமல்
வெளிச்சம் தேடி உடலென்பது
உறக்கம் கொள்ள மறுக்கிறது.
உறங்காமல் கிடப்பதைவிட
உறக்கத்திலும் தேவை விழிப்பு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|