Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
பட்டாணி பாத்

தேவையான பொருட்கள்:

சேமியா - 500 கிராம்
பச்சை மிளகாய் - 13
முந்திரி பருப்பு - 1 மேஜைக் கரண்டி
ரவை - 500 கிராம்
உளுந்துப் பருப்பு - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பச்சைப் பட்டாணி - 2 மேஜைக் கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
நெய் - 1 மேஜைக் கரண்டி
எலுமிச்சம் பழம் - 1
இஞ்சி - சிறு துண்டு
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

ரவை, சேமியாவை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்துப் பருப்பு, முந்திரிப்பருப்பு, கடுகு ஆகியவற்றை வாணலியில் நெய்யை ஊற்றித் தாளித்து, அதனுடன் பட்டாணி, இஞ்சி, மிளகாயைப் போட்டு வதக்கிக் எடுத்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு நீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டுக் கிளறி, நெய் ஊற்றி, கறிவேப்பிலை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைக் கலக்கவும். இதனுடன் கடையில் விற்கும் ரொட்டிகளை வாங்கி துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துப் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.