Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Veg Recipe
ஆப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 மி.லி

புழுங்கல் அரிசி - 500 மி.லி

தேங்காய் - 1 மூடி

ஈஸ்ட் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிதளவு

சோடா உப்பு - சிறிதளவு


செய்முறை:

பச்சரிசியையும், புழுங்கல் அரிசியையும் ஒன்றாக சேர்த்து நன்கு ஊறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை நன்கு புளிக்கவிடவேண்டும். இரவு சிறிது ஈஸ்ட் அல்லது கொஞ்சம் மோரினை மாவில் இட்டு கலந்து வைத்துவிட வேண்டும். தேங்காயினைத் துருவி, பிழிந்து முதல் பாலினை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது முறை பிழிந்து எடுக்கும் பாலினை மாவுடன் கலந்து, சிறிது உப்பும், சோடா உப்பும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். தோசைமாவைவிட இன்னும் சற்று நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். வாணலி சூடானதும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி, வாணலியை சுழற்றி மூடி வைக்க வேண்டும். சிறிது நேரம் சென்று வெந்தவுடன் எடுக்க வேண்டும். மாவினை எடுப்பதற்கு முன்பு சிறிது தேங்காயினையும் துருவிப்போட்டு அரைத்துக்கொண்டால் ஆப்பம் ருசியாக இருக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.