|
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:
தக்காளி - அரைக்கிலோ
வெங்காயம் - 200 கிராம்
உளுந்து பருப்பு, சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய் - 7
உப்பு மற்றும் கொத்துமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை:
வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தைப் போட்டு ஆற வைக்கவும். வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணைய் விட்டு கடுகு, உளுந்து பருப்பை வறுக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளிப் பழத்தை நறுக்கிப்போட்டு, சாம்பார்ப் பொடியைச் சேர்த்து வதக்கவும். வாணலியில் இருப்பவற்றை சாதத்தின் மீது கொட்டிக் நன்றாகக் கிளறவும். இதனுடன் உப்பு, கொத்தமல்லி இலைகளைப் போட்டு சாதத்தை நன்றாகக் கிண்டினால், தக்காளி சாதம் ரெடி.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].
|
|
|
|
|