Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
மீன் குருமா

தேவையான பொருட்கள்:

மீன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
நெய் - 50 கிராம்
மிளகாய் தூள் - அரைக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
பூண்டு - 1
பச்சைமிளகாய் - 4
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
தயிர் - ஒரு ஆழாக்கு

செய்முறை:

மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், மல்லி இவற்றை அம்மியில் வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மசாலாக்களை கழுவிய மீன் துண்டுகள் மீது தடவ வேண்டும்.

பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயத் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி நெய்யை கடாயில் ஊற்றி காய்ந்ததும் மீனைப் போட்டு பொரிய விட வேண்டும். பின்னர் அதில் தக்காளி, பச்சைமிளகாய், தயிர், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொதிக்கவிட வேண்டும். பச்சை வாசனை மாறியதும் பொரித்து வைத்திருக்கும் வெங்காயத்தை மீன் மீது போட்டு சற்று நேரம் அனலில் வைத்து இறக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.