எக் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய்-ஆறு
தனியா-ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம்-அரை டீஸ்பூன்
மிளகு-அரை டீஸ்பூன்
சோம்பு-ஒரு டீஸ்பூன்
மஞ்சத்தூள்-அரை டீஸ்பூன்
பட்டை-ஒரு துண்டு
இலவங்கம்-மூன்று
ஏலக்காய்-இரண்டு
வெங்காயம்-இரண்டு
தக்காளி-இரண்டு
பச்சைமிளகாய்-இரண்டு
இஞ்சி-ஒரு துண்டு
பூண்டு- ஆறு பற்கள்
புளி- சிறிதளவு
தேங்காய்- அரைமூடி
கொத்தமல்லி இலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கோழித் துண்டுகள்-அரைக் கிலோ
வேகவைத்த முட்டை-ஐந்து
செய்முறை:
மிளகாய்,தனியா மிளகுசீரகம்,சோம்பு ஆகியவற்றை வெறும் சட்டியில் போட்டு இலேசாக வறுத்து பொடிக்கவும்.
இந்த பொடியை கோழியுடன் சேர்த்து அரை தேகரண்டி உப்புத்தூளை போட்டு நன்கு கலக்கி ஊறவைக்கவும்.
இஞ்சிபூண்டுடன் வாசனை பொருட்களை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை தனியாக மைய்ய அரைத்து கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை அரிந்து கொள்ளவும்
சட்டியில் எண்ணெய்யை காயவைத்து வெங்காயத்தை போட்டு சிவக்க வறுக்கவும்.பிறகு இஞ்சிபூண்டு விழுதைவும் மஞ்சத்தூளைவும் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி, பச்சைமிளகாயை,கொத்தமல்லிதழையை போட்டு நன்கு வதக்கவும்.தொடர்ந்து ஊறவைத்துள்ள கோழித்துண்டுகளை போட்டு நன்கு கிளறிவிட்டு மீதியுள்ள உப்பை போட்டு நன்கு புரட்டவும்.
பிறகு இரண்டு கோப்பை தண்ணீருடன் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கோழி வெந்தவுடன் தேங்காய் விழுதை அரை கோப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி,நன்கு கலக்கி,உறித்து வைத்துள்ள முட்டைகளையும் போட்டு.மீண்டும் கொதிக்கவிடவும்.குழம்பு பதம் வந்தவுடன் இறக்கிவிடவும்.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].
|
|