Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Non-Veg Recipe
கோழி குருமா

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 750 கிராம்
பட்டாணி - 50 கிராம்
தேங்காய் விழுது - 3 மேசைக்கரண்டி
வெங்காய விழுது - 2 மேசைக் கரண்டி
கசகசா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை - 1
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பட்டை - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கிராம்பு - 4
பச்சை மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி விழுது - 1 மேசைக்கரண்டி
பொரிகடலை மாவு, உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

கோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். அதனுடன் தேங்காய், உப்பு, கசகசா, மஞ்சள், ஊறவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வாசனைப்பூ, பட்டை, கிராம்பு ஆகியவற்றை வறுக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சிப் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெந்த கறிக் கலவையைக் கொட்டி தனியாத் தூள், தக்காளி விழுது, பொரிகடலை மாவு சேர்த்து கலக்க வேண்டும். கொதித்த பின் கொத்துமல்லி தூவி இறக்கினால் கோழி குருமா தயார். சிறிது ஆறியதும் எலுமிச்சை சாறு கலந்து உபயோகிக்க வேண்டும்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் நளபாகம் பகுதிக்கு நீங்களும் சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.