Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

              வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்

தெள்ளு தமிழ்நடை,
         சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
         உள்ளுந் தோறும்உணர் வாகும்வண்ணம்

கொள்ளும் அறம், பொருள்
         இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப்பெற்ற
         தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத தில்லை
         திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
         புரைதீர்ந்த வாழ்வினிலேஅழைத்துச்
செல்லாததில்லை
         பொதுமறை யான திருக்குறளில்
இல்லாதது இல்லை
         இணையில்லை முப்பாலுக்கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
         திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
         பெறும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
         வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
         முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
         காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
         பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
         பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
         வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
         உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
         வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்
எத்துப் பழுத்தவர்
         ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று
         தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.