Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

               கண்ணன் என் ஆண்டான்

புன்னாகவராளி     -     திஸ்ர     ஏகதாளம்
ரஸங்கள் : அற்புதம், கருணை


தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
           தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
           பார முனக் காண்டே!
           ஆண்டே! - பாரமுனக் காண்டே! 1

துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
           சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
           ஆணை வழி நடப்பேன்;
           ஆண்டே! - ஆணைவழி நடப்பேன். 2

சேரி முழுதும் பறையடித் தேயருட்
           சீர்த்திகள் பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிர நின்
           பெயர் முழக்கிடுவேன்;
           ஆண்டே! - பெயர் முழக்கிடுவேன். 3

பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
           பாக்கிய மோங்கி விட்டான்;
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
           காதலுற் றிங்கு வந்தேன்;
           ஆண்டே! - காதலுற் றிங்குவந்தேன். 4

காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்
           காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
           பக்குவஞ் சொல்லாண்டே!
           ஆண்டே! - பக்குவஞ் சொல்லாண்டே! 5

தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
           சோதனை போடாண்டே!
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
           கட்டியடி யாண்டே!
           ஆண்டே! - கட்டியடி யாண்டே! 6

பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
           பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
           ஆகிட வேண்டுமையே!
           உபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே! 7

மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி
           வாங்கித் தரவேணும்!
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
           தரவுங் கடனாண்டே!
           சில வேட்டி - தரவுங் கடனாண்டே. 8

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
           யொருசில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
           தொலைத்திட வேண்டுமையே!
           பகையாவுந் - தொலைத்திட வேண்டுமையே! 9

பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
           பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
           வழி செய்ய வேண்டுமையே!
           தொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே! 10


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com