Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             கண்ணன் என் காதலன் - 1

(செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரஸம்)

தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
         சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
         நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
         கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
         வெறுத்து விட்ட தடீ!          1

பாயின் மிசை நானும் - தனியே
         படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
         சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
         வளர்த்துப் பேசிடுவீர்,
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
         நுங்க ளுறவையெல் லாம்.          2

உணவு செல்லவில்லை; - சகியே!
         உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை; - சகியே!
         மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
         குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே - சுகமே
         காணக் கிடைத்த தில்லை.          3

பாலுங் கசந்த தடீ! - சகியே
         படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
         குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
         நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
         படுத்து மென்று விட்டான்.          4

கனவு கண்டதிலே - ஒருநாள்
         கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்க வில்லை - எவனோ
         என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண் விழித்தேன்; - சகியே!
         மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
         மகிழ்ச்சி கண்ட தடீ!          5

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
         உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
         மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
         இன்பம் விளைந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
         அழகு வந்ததடீ!          6

எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன்கை
         இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ! புதிதோர்
         சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
         யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
          கண்ணின் முன் நின்றதடீ!          7


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com