Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

                 நடிப்புச் சுதேசிகள்

Bharathi
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
          வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
          வாய்ச் சொல்லில் வீரரடீ. 1

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
          நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
          நாளில் மறப்பா ரடீ. 2

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும்
          அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே
          அலிகளுக் கின்ப முண்டோ? 3

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற
          பெண்களின் கூட்டமடீ - கிளியே
          பேசிப் பயனென் னடீ. 4

யந்திர சாலையென்பர் எங்கள் துணிகளென்பார்
          மந்திரத்தாலே யெங்கும் - கிளியே
          மாங்கனி வீழ்வ துண்டோ? 5

உப்பென்றும் சீனிஎன்றும் உள்நாட்டுச் சேலைஎன்றும்
          செப்பித் திரிவா ரடீ - கிளியே
          செய்வ தறியா ரடீ. 6

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்திஎன்றும்
          நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே
          நம்புத லற்றா ரடீ. 7

மாதரக் கற்பழித்து வன்கண்மை பிறர்செய்யப்
          பேதைகள் போலுயிரைக் - கிளியே
          பேணி யிருந்தா ரடீ. 8

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள்செய்ய
          ஆவி பெரிதென்றெண்ணிக் - கிளியே
          அஞ்சிக் கிடந்தா ரடீ. 9

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
          உச்சத்திற் கொண்டா ரடீ - கிளியே
          ஊமைச் சனங்க ளடீ. 10

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
          மாக்களுக்கோர் கணமும் - கிளியே
          வாழத் தகுதி யுண்டோ? 11

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
          ஈனர்க் குலகந் தனில் - கிளியே
          இருக்க நிலைமை யுண்டோ? 12

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
          வந்தே மாதர மென்பார் - கிளியே
          மனதி லதனைக் கொள்ளார். 13

பழமை பழமையென்று பாவனை பேசலன்றி
          பழமை இருந்த நிலை - கிளியே
          பாமர ரேதறிவார்! 14

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்
          தேட்டில் விருப்புங் கொண்டே - கிளியே
          சிறுமை யடைவா ரடீ.! 15

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
          சிந்தை இரங்கா ரடீ - கிளியே
          செம்மை மறந்தா ரடீ. 16

பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல்
          துஞ்சத்தம் கண்ணாற் கண்டும் - கிளியே
          சோம்பிக் கிடப்பா ரடீ. 17

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார்
          வாயைத் திறந்து சும்மா – கிளியே!
          வந்தே மாதர மென்பார். 18



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com