|
பாரதியார் பாடல்கள்
மேத்தா திலகருக்குச் சொல்வது
(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்.)
“ஓய் நந்தனாரே, நம்ம ஜாதிக் கடுக்குமோ, நியாயந்
தானோ நீர் சொல்லும்” என்ற வர்ண மெட்டு.
பல்லவி
ஓய் திலகரே, நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ, சொல்லும்.
கண்ணிகள்
முன்னறி யாப்புது வழக்கம் - நீர்.
மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது
எந்நக ரிலுமிது முழக்கம் - மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம். (ஓய்திலகரே)
சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது
மதம்பிடித் ததுபோ லாச்சு - எங்கள்
மனிதர்க் கெல்லாம்வந்த தேச்சு. (ஓய் திலகரே)
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
வேறெவர்க்குமது தியாஜ்யம் - சிறு
பிள்ளைகளுக்கே உபதேசம் - நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம். (ஓய் திலகரே)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|