Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
பினோதினி தேசாயும் நாடக அரங்கமும்
தாட்சாயணி


நாடக அரங்கின் ஒரு பாதி இருட்டும்
மறுபாதி மெல்லிய வெளிச்சமும்
மக்கிப்போன திரைச்சீலையை சுருட்டி
தலைக்கு வைத்து - ரயில்வே பிளாட்பாரத்தில்
விஸ்வநாததாஸ் உறங்கிக் கொண்டிருக்கிறான் ......
பயணிகளே .......... அவனை தொந்தரவு செய்யாதீர்கள் .....
நிலங்களெல்லாம் பரவிச் சென்ற
தேவதாசிகளின் பாதச்சுவடுகளில்
ஜமீன்களின் நகஇடுக்கு அழுக்காய் .....
மணிச்சத்தங்களுடன் கொண்ட
கூட்டு வண்டியில் - வந்த
சீலை - வேசை ஆக்கி திரும்பப்பட்டது .....
கோயிலிலிருந்து அரண்மனைக்கும் - பின்
அரங்கிற்கும் செலவிற்கும்
வந்த அது - பைத்தியக்காரர்களின்
மொழியாக மாறிவருகிறதை கவனித்தாயா? .....
மனித உடலசைவுகளின் தொன்மமும்
குறியீடும் - கணிப்பொறி சிதைவுகளுடன்
சங்கேத உரையாடலை தொடங்கி இருக்கிறது .....
நல்லது நண்பனே! .....
செல்லுலாய்ட்டின் ஒளி பிம்பத்தின்
கண் கூசும் வெளிச்சத்தில்
தனம்மாளின் வீணை இசையுடன் - மெலிதாக
பினோதினி தேசாய் அழுது கொண்டிருக்கிறாள் .....
சற்றே உற்று கவனியுங்கள்
அது ஒரு வட்டமான அரங்கம்
சுற்றிலும் தீப்பற்றிக் கொண்டிருக்கிறது.
காலியாகிப் போன மதுக்குப்பிகள்
மற்றும் குவளைகளுடன் - மெத்தையில்
உறங்கி கிடக்கிறான் மன்னன் .....
மேலே நிலவு எரிந்து கொண்டிருக்கிறது.
எழுத்தின் வாசனை அறியாத - இசையின்
தொன்மங்கள் தந்த குறியீடுகளுடன்
மாநகரங்களின் மின்சார ரயிலில்
பாடிக் கொண்டிருக்கும் - பாட்டும்
இசையும் யாருடையது? ..........


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.