Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
ஸ்நேகிதன் கவிதைகள்

மிக அடர்ந்த தனிமையினூடாக செல்லும் அவளுக்கு

புலிகள் குறித்து
அத்துப்படியாகியிருக்கும்
உன் ஆன்மாவின்
கீறலையொத்த கிழிசலின் வழியே கழிவிரக்கம் வேண்டி நுழைகிறது
பற்களைப் பிரயோகிக்கும்
சூத்திரம் மற்றதாய்ச்சொல்லும் என் புலி
தொலைந்து போய்விட்ட
வெளிர்நிறப் பூனைக்குப் பகரமாகவோ
இருள் படர்ந்த இரவுகளில்
அக்குள்களுக்கிடையே புகுந்து நிகழ்த்தும்
கதகதப்புக்காகவோ
தனிமையின் நெடுவழிகளில்
அதை துணை சேர்க்கிறாய்
வலியும் சுகமும் பிணைந்த நீளங்களில்
இடையிடையே இருட்டு
களைப்பின் கறை படிந்த சாயங்காலங்களில்
உலர்ந்து போன உன் சருமத்தை
தன் நாவால் வருடுகிறது
சுகிக்காதே
அதற்குத் தெரியும்
நாவுகளால் மாம்சம்
தின்னும் மந்திரம்.

கடற்பெரு வெளிச்சம்

நிகழ்வுகளுக்கும் ஆசைக்குமான
பந்தயத்தில்
இடைக்கயிறாய் மாட்டிக் கொள்வது
மிகக் கொடுமையானது
மேற்பரப்பில் மிதந்து பரவிய
வெங்காயத் தாமரைக்கடியில்
தேங்கிக் கிடக்கிறதென்
பாயத் துடிக்கும் பெருநதி.
காலம் தன் சுழிகளைச்
சாதுர்யமாய் காற்றில் வரைகிறது
ரகஸ்யங்களைப் புலப்படுத்தாது
பள்ளங்களில் பாய்ந்து
தேங்கி
நிரமபி
மேலாக வழிந்து
தாவரந்தழுவி
ஓட ..... ஓட .....
என்றாவது தெரியும்
புத்தனின்
கடற் பெரு வெளிச்சம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.