Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

நாம் தேர்ந்தெடுத்த மதுச்சாலையில்
ஒளியை மூழ்கடித்தது இசைவெள்ளம்
பனிக்கட்டியின் குளுமையில் ஊறிய மது
தன் இயல்பை இழந்துவிட்டிருந்தது.
இரு கோப்பைகள் அருந்திய பின்
இலக்கியம் நோக்கி திரும்பியது பேச்சு.
உன் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகளை
சொல்ல முயன்றபோதெல்லாம்
கேட்க மறுத்தாய்.
முன்முடிவுகளோடு வந்திருந்தாய்.
போதையை கேடயமாக்கி
தப்பித்துக்கொண்டாய்.
காலியான கோப்பைகளில்
விரோத மனப்பான்மை
பொங்கி வழியத் துவங்கியதும்
இரு குடிகாரர்களாய் வெளியேறியபின்
இருக்கைகளில் மீதமாய் அமர்ந்திருந்தது
மது அருந்தும் முன்பிருந்த நீயும் நானும்

உதிர்ப்பது யாது?

அந்த வீட்டின் அருகாமை மரங்கள்
உதிர்க்கின்ற இலைகளை
வேட்டையாடிக்கொண்டிருக்கிறது பூனை
அங்குமிங்கும் ஓடி

உடல் எவ்வி
காற்றில் நீச்சலிட்டு
ஒரு பறவையைக் கவ்வி
தரையிறங்குவது போன்ற
அதன் பாவனைகளை
கவனித்த வீட்டுப்பெண்
அவை வெறும் இலைகள் என்றபடி
பூனையை மார்போடு
அணைத்துச் செல்கிறாள்.
தனது
கற்பனைப் பறவையை கலைக்க
அவளுக்கு உரிமையில்லாததை
குறித்த ஆட்சேபங்களை
மியாவ் என்று வெளிக்காட்டுகிறது
புரிதலின் பேதங்களில்
உதிர்ப்பதை நிறுத்திவிட்டிருந்தன
மரங்கள்

இருந்தும் இல்லாமல் போன இல்லத்தில்.....

கால் பதிக்கும்
ஒவ்வொரு அடியிலும்
வேதனை தகிக்க
கலையாத பொருட்கள்
காலத்தின் தூசுபடிந்து
துயர் இயம்புகின்றன.
அவர்களிடையே
பேச்சொழிந்து
சைகைகள் பாஷைகளாகின்றன.
கண்ணாடியின் நீர்மையில்
தோன்றும் நினைவு முகத்தில்
நிகழ்காலம் கல்லெறிந்து
கலைப்பதை கண்டு
தேறுதலுற்றுக் கிளம்பும்
பெருவிசும்பலோடு
வெளியேறுகிறார்கள்.
குழந்தையிருந்து பறித்த
இலைகளின் வடுக்களோடும்
சீண்டுவாரற்ற மலர்களோடும்
அதிர்ஷ்டமிழந்த செடியொன்று
நகர சாத்தியமற்று
துக்கத்தின் மணம் பரப்பியவாறு நிற்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.