Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜனவரி - ஏப்ரல் 2007
பயணி கவிதைகள்

கடைசி பெட்டிக்குள் நுழையும் ரயில்

முடிவுற்று நீளும்
இவ்விரவின் அடர்த்தியைக்
கிழித்துக் கொண்டு வருகிறது ரயில்
ஒரு கணத்தில் உந்தப்பட்டு
காதலர்களாகி
கடைசிப் பெட்டியின்
கழிப்பறைக்குள்
சல்லாபித்துக் கொண்டிருக்கும் இருவரை
வளைந்து திரும்பும் வேளையில்
கவனித்துவிடுகிறது
பதற்றமும் குரோதமும்
அடைய
உடன் தடம்புரண்டு
காலைக்குச் செய்தியாகிறது.

வர்ணமடிப்பவன்

தொங்குப் பலகையில்
வெளிமாடத்திற்கு
வண்ணமடித்துக் கொண்டிருப்பவன்
வானத்திற்கும் சேர்த்து
வண்ணமடிக்கிறான்
அந்த வழியாகச் செல்லும்
மேகங்கள் திகைக்கின்றன
பின் சிரிக்கின்றன
சில கணங்களில்
மழை தூறத் தொடங்குகிறது
ஒவ்வொரு துளிக்கும்
ஒவ்வொரு வண்ணம்
அடிக்க முயல்கிறான்
தூறலுக்கிடையே வானவில்லையும்
தீட்டிவிடுகிறான் அவன்
முதல் வண்ணத்துளி விழும்
நிலத்தின் மேல்
அடுத்த வண்ணத்துளியை விழச் செய்யும்
சவாலைச் சந்திக்கிறது மேகம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.