அ. செல்வதரன் கவிதைகள்
சமீபமாய் ஒருநாள்
பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன்
பரணில் ஒரு புகைப்பட தொகுதி..
பாட்டி சொன்னாள்:
அதில் ஒரு குழந்தையை காட்டி.
"இது நீ இரண்டு வயசுல...
இது பள்ளிக்கூடம் போகையில...."
பக்கங்களைப் புரட்டி புரட்டி
சொன்னாள் இது...
"இது போன வருசம்...
நீ அனுப்புனது..."
எல்லாம் பார்த்தேன்
இதில் எது எனது வடிவம்
0 0 0
பகவத்கீதை
திருக்குரான்
பைபிள்
ஒன்றாக இருக்கிறது
என்
புத்தக அலமாரியில்
0 0 0
அறுந்துபோன
ஒற்றைக்கால்
செருப்புகூட
உசத்தி தான்
முருங்கை மரத்தில்
தொங்கும்போது.
0 0 0
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|