Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Thendral
Puthiya Thendral Logo
செப்டம்பர் 2007
போலியோவைப் பரப்பும் உலக சுகாதார நிறுவனம்
- ஆனந்த்


இரகீமாபாத் - உத்திர பிரதேசத்தின் சீத்தாபூர் மாவட்டத்தில், லக்னோ - சீத்தாப்பூர் நெடுஞ்சாலை யிலிருந்து 10 கி.மீ தூரம் உள்ளடங்கி இருக்கும் கிராமம். அங்கு சானியா என்ற 2 வயது பெண்குழந்தை போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சானியாவின் தாய் நூர்ஜஹான் கூறுகிறார், "ஏங் கொழந்த பொறந்த 4 வது நாள்லே இருந்து நெறைய தடவ போலியோ சொட்டுமருந்து குடுத்திருக்கேன். இதுவர 12 தடவைக்கு மேல குடுத்தாச்சி. திடீர்னு ஒருநாள் கடுமையான காய்ச்சல். அவளால நிக்கவோ நடக்கவோ முடியல. உள்ளூர் மருத்துவமனைல சோதனை செய்ததுல போலியோன்னு சொல்லிட்டாங்க..."

இது ஓரிடத்தில் நடந்த, ஏதோவொரு நிகழ்வல்ல. உ.பி., ம.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது போலியோ கொடிகட்டிப் பறக்காத குறைதான்.

முன்பு Type-I, Type-II,Type-III என 3 விதமான போலியோ கிருமிகளையும் கட்டுப்படுத்தும் வகையில் Trivalent போலியோ தடுப்புமருந்து இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது இம்மூன்றிற்கு எதிராகவும் மனித உடலில் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் என்று சொல்லப்பட்டது.

தீவிர போலியோ ஒழிப்பு திட்டத்தின்படி தற்போது உ.பி. உள்ளிட்ட பகுதிகளில் Monovalent எனப்படும் தடுப்புமருந்து அளிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பாக Type-I, போலியோ நோயை கட்டுப்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படடது. இது 2005 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவிலிருந்து போலியோவை விரட்டும் இறுதிகட்ட நடவடிக்கை என்று ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த Monovalent போலியோ தடுப்புமருந்து (mOPVI) தொடர்பாக அண்மையில் வெளிவருகின்ற செய்திகள் பெரும் அதிர்ச்சி யூட்டுபவையாக இருக்கின்றன.

இந்த தடுப்புமருந்து அளிப்பதில் ஈடுபட்டுள்ளோர் இதே மருந்து 60கள் மற்றும் 70களில் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டது தான் என்று தெரிவித்தனர்.

ஆனால், கடந்த ஏப்ரல் 21 ஆம் நாள் Lancet மருத்துவ இதழில் வெளியான ஒரு கட்டுரையிலோ, முன்புள்ள போலியோ தடுப்பு மருந்துகளை விட 5 மடங்கு அதிக சக்திவாய்ந்த இந்த mOPVI தடுப்புமருந்து, 2005ல், கடைசியாக பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து போலியோ மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கள் நோக்கம் இதன் திறனை அறிவதே என்று அறிவித்துள்ளனர். இக்குழுவினர், பெயர் பட்டியல் Grassly NC, Wenger J,
Durrani S, Bahl S, Deshpande JM,
Sutter RW, Heymann DL and
Aylward RB ஆகியோர் ஆவர்.

ஆக, இந்த தடுப்புமருந்து புதிது என்பதும், அது சோதனை ரீதியிலேயே இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் வெள்ளிடை மலையென தெளிவாகத் தெரிகின்றன. ஆக, நம் மக்கள் சோதனை விலங்குகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

இதுதான் மருத்துவ அறமா?

இதுகண்டு அதிர்ச்சியடைந்த புகழ்பெற்ற மருத்துவர் ஜேக்கப் எம். புலியல், சிக்கலை Lancet ஆசிரியரிடம் எடுத்துச் சென்றார். அறம்பிறழ்ந்த இந்த நிகழ்வை அறிந்த ஆசிரியரோ, "இத்தகைய முறைகேடுகளுடன் நடத்தப்படும் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டதில் அதிர்ச்சியடைகிறோம்" என்றதோடு, கட்டுரை ஆசிரியர்களிடம் விளக்கமும் கேட்டார்.

இது புதிதா இல்லையா, பரிசோதனை முயற்சியா இல்லையா என்பதற்கு விடையளிக்காத அவர்களோ தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையாளரின் அனுமதியுடனே அது இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என்றார்கள்.

தேவையின்றி, 5 மடங்கு அதிக சக்திவாய்ந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அதன் எதிர்விளைவு குறித்து ஆராயப்படவில்லை. இதன் விளைவாக போலியோவும், Non-Polio acute Flaccid Paralysis (AFP) எனப்படும் பக்கவாத நோயும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது என்று உ.பி. மருத்துவர்களால் கருதப்படுகிறது.

இந்த கிதிறியால் 10,264 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 209 பேர் போலியோ பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எஞ்சிய 10,053 பேரிலும் கூட வெறும் 2,553 பேரே தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். போலியோ இல்லாத கிதிறியால் பாதிக்கப்பட்டுள்ளோரில் 4800 பேர் பக்கவாதத்தால் வீட்டினுள் முடக்கப்பட்டு உள்ளனர் அல்லது இறந்துவிட்டனர்.

6 முறை இந்த mOPVI மருந்து அளித்த நிலையிலேயே, 2006 ஆம் ஆண்டில் நிலைமை, பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தியபோதிலும் உரிய அதிகாரிகள் இதனை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் ஜோசப் புலியல். மேலும், போலியோமைலிட்டிஸ் கிருமியானது நோயாளிகளின் மலத்தில் மட்டுமே காணப்படும் என்பதால் அனைவரிடத்தும் இதனை ஆராய்வதும் கடினம் என்கிறார் அவர்.

உ.பி.யின் குடும்ப நலத்துறை உயர் அதிகாரியான டாக்டர் எல்.பி. பிரசாத், 90% குழந்தைகளுக்கு பலமுறை போலியோ தடுப்புமருந்து அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்.

ஆக, போலியோ ஒழிப்புமுறை என்ற பெயரில் உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசும் சேர்ந்து சொந்த மாநாட்டு மக்களையே ஆய்வுக்கூட எலிகளாக்கி பரிசோதித்து, போலியோ நோயாளிகளாகவும் ஆக்கி உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தனை கொடுமைகளும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஒரு பட்டம் பெற்ற மருத்துவர் இருக்கும் நிலையிலேயே நடந்துள்ளது என்பது மாபெரும் வெட்கக்கேடு.

சீனாவாக இருந்திருந்தால் இத்தகைய பொறுப்பற்ற அதிகாரிகளையும். பிறரையும் தூக்கில் போட்டிருப்பார்கள்.

என்ன செய்வது?

இந்தியாவில் பிறந்துவிட்டோமே!

box news

போலியோ ஒழிப்பு சாம்பியன் அமைச்சர் அன்புமணிக்கு விருது

போலியோ (இளம்பிள்ளைவாதம்) நோய்க்கொடுமையின் தீவிரத்தை உணர்ந்து, அந்நோயை ஒழிக்க 1988-ம் ஆண்டு முதல் உலகநாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமுதல், பல்வேறு நாடுகளின் சிறப்பி-க்க பல அரசியல் தலைவர்களும், தனி மனிதர்களும் போலியோ நோயை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உலக நாடுகளின் மற்ற சகாக்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு முழுஅர்ப்பணிப்புடன் போலியோவுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர்.

போலியோ நோய் ஒழிப்பில் பங்கு கொண்டு சிறப்பான பங்களிப்பை அளித்த அது போன்ற தலைவர்கள், அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் மருத்துவ முகமைகளின் தலைவர்களை கவுரப்படுத்துவதற்காக 1995-ம் ஆண்டு முதல் 'போலியோ ஒழிப்பு சாம்பியன்' என்னும் விருதினை சர்வதேச ரோட்டரி சங்கம் வழங்கி வருகிறது.

இந்த விருதினை இதுவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் ஜான் மேஜர், டோனி பிளேர், நைஜீரிய அதிபர் ஒலுசேகன் ஒபாசேன்ஜோ, அங்கோலா அதிபர் ஜோஸ் எடுவார்டோ டோஸ் சான்டோஸ், ஐ.நா. சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோ' அன்னான், பாரத பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பெற்றுள்ளார்கள்.

இந்தநிலையில், இந்தியாவில் போலியோ நோயை கட்டுப்படுத்துவதிலும், போலியோ நோய்க்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அளித்து வரும் ஆதரவையும் கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத் துறை மந்திரி அன்புமணி ராமதாசுக்கு இந்த ஆண்டுக்கான 'போலியோ ஒழிப்பு சாம்பியன்' விருதினை வழங்க சர்வதேச ரோட்டரி அமைப்பு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதினை, ரோட்டரி அறக்கட்டளைத் தலைவராான டாக்டர் ராபர்ட் ஸ்காட் வழங்கினார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com