சரணாலயம்
ராபிசா
தவமாய்
தவமிருந்தாள் பிள்ளைக்காக...
பிள்ளை பிறந்தான், சித்திரையில்...
விசிறியில்லா குடிசை
வீட்டில்
துகில்கொள்ள மறுத்தவனுக்கு,
வேம்பின் மூலிகைக் காற்றிலே
வேதப்பாடல்கள் பாடி
தாலாட்டினாள் - தன்
முந்தானித் தொட்டிலில்.
முட்டிப் போட்டு தவழும்போது
முகங்குப்பிற விழுந்தவனை
முன்சிந்தனையின்றி அணைத்தவள்.
முந்தானித் தொட்டிலின்
மூத்திரம் காயும் முன்
துப்பட்டாவோடு, அவன்
துகில் களைத்து
தூக்கிச் சென்றாள் - அவன்
துணைவி.
பசிக்காய் அழுதபோது
பாலூட்டிய மார்பின்
மடுக்களிலோ
இரத்தம் கசிகிறது!!.
ஒரு முந்தானையும்
தெருவில் காய்கிறது
மூத்திரத்தால்...
முந்தானை யிழந்தவளோ! சரணடைந்தாள்
முதியோர் இல்லத்தில்.
மதியிழந்த மங்கைகள்
கடைவீதியில்
காட்சி பொருளாய் அலைவதுபோல்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|