சுரண்டப்படும் பீடித்தொழிலாளர்கள்
எஸ். எம். அந்தோணிமுத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் வறியவர்கள் - பெண்கள் சுமார் 50,000 பேர். வேறு வேலைகள் தெரியாததாலும், வேறுவேலை இல்லாததாலும் பீடித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது சுரண்டும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைகிறது.
நாள்தோறும் 12மணி நேரம் உழைத்தால் தான் மாதம் ரூ.400 முதல் ரூ. 550 வரை சம்பளம் கிடைக்கும். இந்த சம்பளம் தான் ஒட்டுமொத்த குடும்ப தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தொழில் செய்யும் இவர்களுக்கு எந்த அத்தாட்சியும் கிடையாது. சர்வீஸ்கள்க்கு, லாக்புக், பாஸ்புக் இல்லை. கேட்டால் வேலை இல்லை.
1000 பீடிக்கு ரூ. 69.99 பைசா சம்பளம். 1000 பீடி சுற்றுவதற்கு தரமான இலை 700கிராம் வழங்கவேண்டும். சரியான எடையில் இலை தரமான தூள் வழங்குவதில்லை.
பீடித் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு திட்டம் கனவாகவே உள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் துறை ஆணையாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் என ஒரு பெரும் படையே இருந்தும் ஏழை தொழிலாளர்களுக்கு பலனேதும் இல்லை.
மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சலுகைதிட்டங்கள் எதுவும் இல்லாததால் பல ஆயிரம் பீடித் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வாய்ப்பு இல்லை. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி சலுகைகள் மறுக்கப்படுகிறது.
மகப்பேறு சலுகை, விடுப்பு ஊதியம் இல்லை. தீபாவளி ஊக்கத்தொகை என்பது பீடி முதலாளிகள் - காண்ட்ராக்டர்கள் கொடுப்பது தான். எதை கொடுத்தாலும் மறுப்பேதும் இல்லாமல் பெற்றுக்கொள்ளும் சோகம்.
வறியவர்களின் வயிற்றில் அடித்துச் செழிக்கும் முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர் கொடுமையை ஒழித்து அனைத்துவித சலுகைகளும் உரிமைகளும் பீடித் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வழிகோலுவோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|