கவிதைகள்
- எஸ். விஜயன்
கசாப்பு கடையிலிருந்து
பறந்து வந்த
இறகுகளைக்கண்ட குருவிகள்
சமாதானமடைந்தன
அலைந்து திரியும்
வாழ்க்கை மேலென்று.
0
கிளை ஒடிந்து
சிறுவன் விழுந்ததும்
மரத்தை சபித்தார்கள்
மரமோ
கைகள் துண்டானதால்
வலியில்
முனகிக் கொண்டிருந்தது.
0
இக்கரைக்கும்
அக்கரைக்கும்
வழியனுப்பிய
பரிசல்கள்
வழி தொலைந்து நின்றன
நீர் வற்றியதால்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|