கவிதைகள்
ஆழ்துயிலைக் களைந்துதறி
ஆருயிரே கண் திறவாய்
சூழ்ந்த கரும் இருட்குவியல்
சுருக்கெனவே மறைவது காண்!
ஒளிவெள்ளம் உலகெங்கும்
ஓடியாட்சி செய்வதைப் பார்.
களிகொள்ளக் காட்சியொன்று
கண்ணெதிரே தோன்றுது பார்!
இதயத்தை மகிழ்விக்கும் இன்பமூட்டம்
இதமாக எழுவதைக் காணவாராய்!
பதமாகப் பிரிந்துருகும் பனிமூட்டம்
பன்னீராய்க் கரைவதைக் காணவாராய்!
இரவெல்லாம் சுகமான இன்னுறக்கம்
இருப்பினும் ஏனிந்தக் கடுந்தூக்கம்?
விரைந்தோடி வருகின்ற கதிர் ஒளியை
வித்தகனே கண்திறந்து களிப்பாய் நீ!
ருஷ்யமூலம் - யான் காகுபாலா
ஆங்கிலவழி தமிழாக்கம். - எஸ். சந்திரசேகரன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|