புத்தக அறிமுகம்
நூல் : வழிதொலைத்த பரிசல்கள்
ஆசிரியர் : எஸ். விஜயன்
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்
1, புதூர் 13 - வது தெரு,
அசோக் நகர்,
சென்னை - 83.
விலை : ரூ. 50
வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நம் விழியில் பட்டு மறையும் காட்சிகள் விஜயனின் எழுத்துகளில் கவிதைகளாய் ஆகின்றன. இயல்பான, எளிமையான வரிகளில் இக்கவிதைகள் நம்மை வசீகரிக்கின்றன.
நூல் : ஐ.ஏ.எஸ். வெற்றியின் இரகசியம்
ஆசிரியர் : தி.ந. வெங்கடேஷ் இ.ஆ.ப.
நூல் கிடைக்குமிடம்:
மாவட்ட மைய நூலகம்,
125ஏ, பழைய புறவழிச்சாலை,
கரூர் - 1.
கரூர் மாவட்ட ஆட்சியரான திரு. தி.ந. வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற விரும்பும் இளையோருக்கு வழிகாட்டும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். பத்திரிகையாளர் கோ. சிவராமனால் எளிமையாக தொகுக்கப்பட்டு, இலவச வெளியீடாக வழங்கப்படுவது சிறப்பு.
நூல் : குறள்போல் சிலையும் காலத்தை வெல்லும்.
ஆசிரியர் : குமரி மைந்தன்
வெளியீடு : திருவள்ளுவர் அறக்கட்டளை
முகவரி : 6-7கே, மேட்டுத்திடல், (ஐகிரவுண்டு)
கன்னியாகுமரி . 629 702.
விலை : ரூ. 10
தமிழிய உணர்வாளரான நூலாசிரியர், குமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை பராமரிப்பு இல்லாத நிலை கண்டு குமுறி, ஆராய்ந்து, தனது பொறியாளர் திறனை பயன்படுத்தி, சில வழிவகைகளைக் கூறுகிறார்.
நூல் : வர்மமும் தடவுமுறை அறிவியலும்
ஆசிரியர் : மருத்துவர். த. இராஜேந்திரன்
விலை : ரூ. 350
பிரதிகளுக்கு : புதிய தென்றல்
அன்பகம், மூலச்சல், மேக்காமண்டபம் - 629166.
களரி, சிலம்பம் முதலான கலைகளுக்கு அடிப்படையானது, சித்த மருத்துவ அறிவியல் அடிப்படையிலான வர்மக்கலையாகும். அது தனித்தியங்கும் திறனுடைய மருத்துவ முறையுமாகும்.
பல்வேறு சித்த வர்ம ஆசான்மார், பலநூறு ஏட்டுச்சுவடிகள் மூலம் தான் பெற்று, அனுபவிக்கும் செய்திகளை நூலாக்கியுள்ளார் மருத்துவர். த. இராஜேந்திரன். வர்ம அறிவியலின் வரலாறு, அடிப்படைகள், தத்துவம் என பேசும் இந்நூலில் வர்ம தடவுமுறைகள், (மசாஜ்) குறித்து விரிவாக எழுதப்பட்டு உள்ளது.
வர்மத்திற்கு மாற்றான வர்ம அடங்கல்கள், வர்ம மருந்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. தடவுமுறை பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்டு உள்ளது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|